மினுவாங்கொடை துப்பாக்கிச்சூடு: மூவர் வசமாகச் சிக்கினர்!

கம்பஹா மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலேவெல பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடை, கமன்கெதர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

51 வயதான தந்தையும், 23 மற்றும் 24 வயதுகளுடைய இரு மகன்களுமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த மூவரும், கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியிலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலம் நிலவி வந்த முரண்பாடு காரணமாக இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.