இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 6 பேர் அகதிகளாகத் தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு வழியாகச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 4 ஆம் திட்டில் தரை இறக்கி விடப்பட்டனர். அவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள் மறாயன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

இதையடுத்து அகதிகள் நின்ற இடத்துக்குச் சென்ற இந்தியக் கரையோரக் காவல் படைக்குச் சொந்தமான படகு அவர்களை மீட்டு இராமேஸ்வரத்துக்குச் கொண்டு சென்றது.

இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட அகதிகள் தற்போது பொலிஸாரின் விசாரணையில் உள்ளனர்.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றவர்களில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் அடங்குகின்றனர்.

அவர்கள் தலைமன்னார், அரிப்பு மற்றும் பேசாலையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.