சிறையில் இருந்த 8 விடுதலை புலி உறுப்பினர்களை வீட்டுக்கு செல்ல அனுமதித்த ரணில்!

அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு அளித்துள்ளார்.

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இருந்த இருவர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

புனர்வாழ்வு முடிந்த மேலும் 2 உறுப்பினர்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.