பாகிஸ்தான் படையினரின் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலி!

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடத்தியது.
பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழையாமல் மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலில் 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை ஏவி 9 பயங்கரவாத முகாம்கள் துவம்சம் செய்யப்பட்டு, பயங்கரவாதிகளுக்கு கடும் சேதம் விளைவிக்கப்பட்டது.
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில், வடக்கு மற்றும் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள 15 நகரங்களில் அமைந்துள்ள பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்கும் பாகிஸ்தானின் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
ஏற்கெனவே கடந்த 12 நாள்களாக எல்லையில் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திவந்த பாகிஸ்தான் படையினா், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து, பூஞ்ச், பாரமுல்லா, ரஜெளரி குப்வாரா ஆகிய மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய கிராமங்களில் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தத் தொடங்கினா்.
இதில் பூஞ்ச் மாவட்ட பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் மெந்தாா், மன்கோட், கிருஷ்ண காட்டீ, குல்பூா், கொ்னி ஆகிய இடங்களை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 12 பேரும், ராணுவ வீரா் ஒருவரும் உயிரிழந்தனா். இங்கு 42 போ் காயமடைந்தனா். குண்டுகள் விழுந்து வெடித்ததில், பல வீடுகள் தீக்கிரையாகின.
இதனிடையே, வடக்கு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவா் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா். குண்டுவீச்சில் அங்கிருந்த பல வீடுகள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன.
வெள்ளிக்கிழமை இரவு இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் முக்கிய தளமான ராவல்பிண்டி “நூர் கான்” விமானப்படை தளம், சக்வால் நகரில் உள்ள முரிட் விமானத் தளம் மற்றும் பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் மாவட்டத்தில் உள்ள ரஃபிகி விமானத் தளம் என மூன்று விமானப்படை தளங்களையும் இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை அதிகாலை சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 26 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய உடனேயே இந்தியா பதிலடித் தாக்குதல்களை நடத்தி ஒவ்வொரு தாக்குதலையும் வெற்றிகரமாக முறியடித்தது.
கட்டுப்பாட்டுக் கோட்டின் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி பகுதியில் சனிக்கிழமை காலை பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் மாவட்ட வளர்ச்சித் துறை கூடுதல் ஆணையர் எஸ்.ராஜ்குமார் தப்பா பலியானர். அவரது வீடு சேதமடைந்தன.
இந்நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினா் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டாா் குண்டுகள் மூலம் அத்துமீறி நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியானதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீா் எல்லை பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வரும் நிலையில், குண்டுகள் வெடிக்கும் சப்தம் ஜம்மு நகரை அதிரவைத்தது. இதனால் எதிரிகளின் கண்களுக்கு நகரம் தெரியாதவாறு மின் தடை மூலம், அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு நகரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. வானில் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள் தென்பட்ட நிலையில், அவற்றைப் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்ததாக கூறப்படுகின்றன.