ஈரானிய தாக்குதல் தகவல்களைப் பகிர வேண்டாம்: இஸ்ரேலின் கடும் எச்சரிக்கை!
இஸ்ரேலுக்குள் இடம்பெறும் ஈரானிய தாக்குதல் தொடர்பான காணொளி, படங்கள், இடங்கள் என்பவற்றை செயார் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இஸ்ரேலிய ராணுவமும், மொஸாட்டும் எச்சரித்துள்ளது.
வீடியோக்களை செயார் செய்த பலரை இஸ்ரேலிய ராணுவம் கைது செய்திருக்கிறது.

சேத விபரங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் இருப்பதற்கும், சேதமுற்ற இடத்தை ஈரான் அடையாளம் கண்டுவிடக் கூடாதென்பதை இலக்காக கொண்டும் இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பலர் கைது செய்யப்பட்டதிலிருந்து இஸ்ரேலிய வீடியோக்களின் வருகை தடைப்பட்டுள்ளது.
