எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து: 17 ஆம் திகதி சபையில் விவாதம்!

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முழு நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல எனவும், சாதாரண பெரும்பான்மையுடன் அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் எனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பை சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையிலேயே மேற்படி சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.