குளக்கரையில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!
அனுராதபுரம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலலுவெவ குளக்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பிரதேச மக்களின் உதவியுடன் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அனுராதபுரம், நொச்சியாகம, காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதிவான் விசாரணைகளுக்குப் பின்னர், பிரேத பரிசோதனைக்காகச் சடலம் கெக்கிராவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கான காரணம் தொடர்பில் கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
