கிளிநொச்சியில் ரயிலும் காரும் மோதி கோர விபத்து! இளம் யுவதி சம்பவ இடத்திலேயே பரிதாப உயிரிழப்பு!! – மேலும் இருவர் படுகாயம்.
கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். தேவி விரைவு ரயில், யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் காருடன் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் கிளிநொச்சி, செல்வாநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் அக்யசா (வயது 17) என்ற இளம் யுவதியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
