வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்.

வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர்.

5 விமானங்கள் ஊடாக குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 76 பேர், அபுதாபியில் இருந்து 42 பேர், டோஹா கட்டாரில் இருந்து 96 பேர் மற்றும் இந்தியாவில் இருந்து 53 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.