கொளுத்தற வெயில்ல முகம் எரியாம இருக்க ………

உடலில் மிகப்பெரிய உறுப்பு சருமம் தான். அதிகப்படியான வெப்பத்தை நேரடியாக பெறும் போது இதில் சிவப்பு, சில நேரங்களில் வீக்கம் மற்றும் வலிமிகுந்த தோல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இது சன்பர்ன் என்று அழைக்கப்படுகிறது. இது இலேசானது முதல் கடுமையான அளவு வரை மாறலாம்.

சருமத்தின் வகையை பொறுத்து இது மாறுபடும். தோல் புற்றுநோய்க்கு இந்த சன்பர்ன் ஆபத்தானது. சமயங்களில் இது தோல் கொப்புளத்தை உண்டாக்கும். வீட்டு வைத்தியம் மூலம் சன்பர்ன் வந்த பிறகு சிகிச்சை கொள்வதை காட்டிலும் இதை தவிர்ப்பது தான் நல்லது.

வெயிலின் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். அதிகப்படியான சரும எரிச்சல் பல மணி நேரங்களுக்குள் சருமத்தில் சிவப்பை உண்டாக்கிவிடும். குறைந்தது 24 மணி நேரத்துக்குள் இது அதிகபட்சமான சிவப்பை கொண்டிருக்கும். இலேசான வெயில்கள் பொதுவாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலேசான சிவப்பை உண்டு செய்யும். வேறு எதையும் உண்டாக்காது.

அதிகபடியாக மாறும்போது இது கொப்புளங்களை உண்டாக்கலாம். அதிகப்படியான வெயிலால் இந்த சருமத்தில் ஏற்பட்டிருக்கும் கொப்புளங்கள் பலவீனமடையும் வரையிலும் வலிமிகுந்ததாக இருக்கும். இதற்கு மருத்துவ பராமரிப்பு தேவைப்படலாம். கடுமையான கோடையின் நுழைவில் இருக்கும் நாம் இதை தடுக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

முதலில் பாதிப்பை உண்டாக்கும் சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து உங்களை பாதுகாத்துகொள்ளுங்கள். வெளியில் செல்லாமல் இருக்க முடியாதே என்பவர்கள் உச்சி வெயில் காலத்தில் வெளியே செல்லாமல் இளவெயிலில் அல்லது மாலை வெயிலில் செல்வது நல்லது. காலை 10 மணி முதல் மாலை 4 மணீ வரை அதிக சூரிய ஒளி படாமல் நிழலில் செல்லுங்கள்.

வீட்டிலிருப்பவர்களே கண்டிப்பாக சன்ஸ்ட்கீரின் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலையில் வெளியில் செல்பவர்கள் எப்போதும் சன்ஸ்க்ரீனை வெளியே செல்லும் போது எடுத்து செல்லுங்கள். 15 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்பிஎஃப் உடன் யுவிஏ./யுவிபி சன்ஸ்க்ரீனை பயன்படுத்தவும்.30 அதற்கு மேற்பட்ட எஸ்பிஎஃப் உடனான நீர் எதிர்ப்பு சன்ஸ்க்ரீனை பயன்படுத்தவும்.

நீங்கள் வெளியே செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக வெயில் படும் சருமத்தில் தடவி விடவும். ஒவ்வொரு முறை வியர்வைக்கு பிறகும் இதை பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மணீ நேரத்துக்கு ஒருமுறை பயன்படுத்துங்கள். சூரியனின் தாக்கம் இல்லாத நேரமாக இருந்தாலும் சன்ஸ்க்ரீன் தவிர்க்க வேண்டாம்.

சரும எரிச்சல் என்பது சருமத்தை போன்றே கண்களையும் பாதிக்க கூடியது. கண்களில் உஷ்ணம், கண் சிவப்பு, கண் எரிச்சல் போன்றவை வராமல் தடுக்க எப்போதும் சன் கிளாஸ் அணிய பழகுங்கள். கண் இமைகளின் மென்மையான சரும பகுதி தோல் புற்றூநோய்க்கான பொதுவான இடமாகும். அதிக சூரிய ஒளி படும்போது அது கண்புரையை உண்டாக்கலாம். அதனால் தான் சூரியனை நேரடியாக கண்களால் எப்போதுமே பார்க்க கூடாது.

சூரியனின் புற ஊதாக்கதிர்களிலிருந்து கண்களை பாதுகாக்க ஒரு கூலிங் கிளாஸ் அணீவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அதே போன்று உச்சந்தலையையும் தாக்காமல் இருக்க பாதுகாப்பான காற்றோட்டமான தொப்பியை அணிந்து கொள்ளுங்கள்.

இறுக்கமான நெரிசலான காற்று புகாத ஆடைகள் கோடைக்காலத்தில் மோசமானவை. வெப்ப புண் என்று சொல்லக்கூடிய இவை வராமல் இருக்க பருத்தியிலான ஆடைகள் அவசியம் தேவை. கருப்பு மற்றூம் அடர்ந்த நிற ஆடைகளை அணியும் போது அது சூரியனின் புற ஊதாக்கதிர்களை அதிகமாக உறிஞ்சி எடுக்கும். இது சரும எரிச்சலை அதிகமாக்க செய்யும். இயன்றவரை வெளிர் நிற அல்லது வெள்ளை நிற ஆடை அணிவது பாதுகாப்பனது.

தவிர்க்க முடியாமல் வெளியெ செல்லும் போது வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் அருகில் இருக்கும் மரங்களின் வரிசையில் உட்காரலாம். சூரிய குளியலுக்கு பிறகு கடற்கரையில் தலைக்கு மேல் ஒரு குடையை பொருத்தி ரிலாக்ஸ் செய்ய காரணம் அதிக வெயில் படாமல் இருக்க வேண்டும் என்பதால் தான்.

நீங்கள் அதிக வெப்பம் காரணமாக நீச்சலை விரும்பினால் நீச்சலுக்கு பிறகு உங்கள் முழு உடலையும் நிழலில் இளைப்பாற விடுங்கள். இது மறைமுக சூரிய ஒளியை அளிக்கும் என்றாலும் ஆபத்தும் அதிகமாக இருக்காது.

சரும எரிச்சல் போன்று உதடுகளும் எரியக்கூடும். இது தோல் புற்றூநோயை உண்டாக்கும் மற்றொரு பொதுவான பகுதி என்று சொல்லப்படுகிறது. உதடுகளில் ஆக்டினிக் செலிடிஸ் என்னும் நோய் உருவாகவும் வாய்புண்டு. இது புற்றூநோய்க்கு முந்தைய நிலை. அதிகப்படியான சூரிய ஒளியால் உதட்டுக்கு கீழ் இருக்கும்.

தற்போது லிப் பம் வகைகளும் எஸ்பிஎஃப் உடன் வருகிறது 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்பிஎஃப் பார்த்து வாங்கவும். ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை இதை பயன்படுத்தவும்.

Leave A Reply

Your email address will not be published.