லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலி.

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து சாரதி பலி!

பதுளை, லெஜார்வத்தை புதுமலை தோட்டப் பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி பலியாகியுள்ளார்.

நேற்று பிற்பகல் (24/03) வெட்டுமரக்கட்டைகளை ஏற்றிச் சென்றபோதே பள்ளத்தில் குடைசாய்ந்து லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.