ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட கடைசி மணித்துளிகளது விவரங்களை ரஷ்யா இன்று வெளியிட்டுள்ளது!

இன்று அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட நாள். அடால்ஃப் ஹிட்லரின் கடைசி மணிநேரம் குறித்த தகவலை ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் வெளியிட்டுள்ளது.

1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி, சோவியத் படைகள் , ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரை திறம்பட முடிவுக்கு கொண்டு வர பெர்லினை ஆக்கிரமிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மே 2, 1945 இல், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹிட்லருக்கு சேவை செய்த லெப்டினன்ட் ஜெனரல் ஹான்ஸ் பவர், சோவியத் துருப்புக்களால் பிடிக்கப்பட்டு மாஸ்கோவில் நீதி விசாரணைக்கு உட்படுத்துப்பட்டார்.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் பவரின் கோப்பில் இருந்து ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 30, 1945 இல், நாஜித் தலைவரான ஹிட்லரும் , அவரது மனைவி ஈவா பிரவுனும் தற்கொலை செய்து கொள்வதற்கு சற்று முன்பு, ஹிட்லருடன் நடந்த தனது கடைசி உரையாடலை பவர் விவரித்துள்ளார்.

பவரின் கூற்றுப்படி, ஹிட்லர் தனது கடைசி நாட்களில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவில்லை.

அவரது கைகள் நடுங்கியதாகவும் அவரது நோக்கங்கள் தெளிவாக இருந்ததாகவும் பவர் கூறியுள்ளார்.

“ஹிட்லர் என்னை ஹாலில் சந்தித்து தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் என் கையை குலுக்கி சொன்னார். “நான் உங்களிடமிருந்து விடைபெற விரும்புகிறேன், பவர், உங்களின் பல வருட சேவைக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

பவரின் சாட்சியத்தின்படி, ஹிட்லர் அவருக்குப் பிடித்தமான பிரஷ்யா நாட்டு அரசரான ரெம்ப்ராண்டின்  உருவப்படத்தை பவருக்கு வழங்க விரும்பினார்.

தற்போதைக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று ஹிட்லரிடம் விளக்க முயற்சித்துள்ளார் பவர். இப்படியானால், இந்த நேரத்தில் “எல்லாம் சிதைந்துவிடும்” என்று கூற முயற்சித்துள்ளார்.

“எனது படை வீரர்களால் இனி தாக்கு பிடிக்க முடியாது. என்னாலும் இனி தாங்க முடியாது, ”என்று அவருக்கு ஹிட்லர் பதிலளித்துள்ளார்.

அவர் இறந்த பிறகு, ஹிட்லரதும் , பிரவுனினதுன் உடல்களை “உடனடியாக” எரித்து விடும்படி உத்தரவிடப்பட்டதாக பவர் சாட்சியமளித்துள்ளார்.

ஏப்ரல் 1945 இல் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி தம் மனைவி கிளாரா பெட்டாசியுடன் சுவிட்சர்லாந்துக்குத் தப்பியோட முற்படுகையில், இத்தாலியின் கோமோ ஆற்றின் அருகில் பார்ட்டிசான்களால் பிடிபட்டு பின் அவரும் அவர் மனைவியும் சுட்டு கொல்லப்பட்டனர். இவரது உடல் மிலானுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஒரு எண்ணெய் விற்பனை நிலையத்தில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதே கதி அவர்களது உடல்களுக்கும் ஏற்படும் என்று அஞ்சிய ஹிட்லர் இந்த வெளிப்பாட்டை அவரிடம் தெரிவித்தார்.

உரையாடலுக்குப் பிறகு சில மணிநேரங்களுக்குப் பிறகு, அங்கிருந்த ஆவணங்களை எரித்துவிட்டு பெர்லினை விட்டு வெளியேறத் தயாரானபோது, ​​பவர் ரெம்ப்ராண்டின் உருவப்படத்தை எடுத்துச் செல்வதற்காக திரும்பினார்.

ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்று தெரிந்தது. ஹிட்லர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். மேலும் ஹிட்லர் மற்றும் பிரவுனின் உடல்கள் ஏற்கனவே தீயில் எரிக்கப்பட்டிருப்பதை பவர் கண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.