வாரத்தில் 3 நாட்களே பாடசாலைகள் இயங்கும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் தொடங்கவுள்ளன என்று கல்வி அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மறு அறிவித்தல் வரை, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும் என்றும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறில்லாவிடின் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.