டேய் நீ கிழிச்சது போதும்.! பொருட்களை வீசி எறிந்து செம்ம ரகளை செய்த ஏடிகே.!

அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோக்களில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். எப்போதும் இல்லாத அளவிற்கு 21 போட்டியாளர்களை கொண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது வரை மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.

இரண்டாவது வாரம் ஜிபி முத்து தானாக முன் வந்து வெளியேறிவிட, நடன இயக்குனர் சாந்தியை எலிமினேட் செய்து அனுப்பியுள்ளனர். மூன்றாவது வாரத்தில் அசல் கோளாறு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். தற்போது நான்காவது எலிமினேஷனாக ஷெரினாவும், ஐந்தாவதாக மஹேஸ்வரியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்த முறை இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரம் ஒளிபரப்பும் வகையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் செய்யும் அனைத்து விஷயங்களையும் லைவ்வாக பார்க்க முடிகிறது.

கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் சண்டை, சச்சரவு தொடர்ந்து கொண்டே இருந்தது. மேலும் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வந்தது. இதனால் பலரும் நிகழ்ச்சியை ஒழுங்காக கொண்டு செல்லுமாறு கமலஹாசனுக்கு கோரிக்கை வைக்க, அவரும் வார இறுதி நாட்கள் எபிசோடில் வந்து போட்டியாளர்களை வறுத்து எடுத்து விட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடர்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு ம்யூஸியம் ஆக மாற வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ராபர்ட் மாஸ்டர் ராஜாவாகவும், ரட்சிதா ராணியாகவும், மணி இளவரசனாகவும், ஜனனி இளவரசியாகவும், விக்ரமன் அரசியல் குருவாகவும், அசீம் படைத்தளபதியாகவும் மாறியுள்ளனர்.

தற்போது அசீம் மற்றும் ஏடிகே இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அசீமை பார்த்து ஏடிகே நீ கிழித்தது போதும் என்று சொல்ல சண்டை பெரிதாகிறது.

Leave A Reply

Your email address will not be published.