Twitter நிறுவனத்தின் அனைத்து காரியாலயங்களும் மூடப்பட்டன

ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் உடனடியாக செயல்படும் நிலையில் தற்காலிகமாக மூடப்படும் என்று ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது . நவம்பர் 21 அன்று அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பில் காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சமூக ஊடகங்கள், செய்தித்தாள்கள் அல்லது பிற இடங்களில் உள்ள இரகசிய நிறுவனத் தகவல்கள் குறித்து கருத்து அல்லது விவாதங்கள் செய்வதை தவிர்க்கும்படியும் , நிறுவனத்திற்குச் சம்மந்தப்பட்ட கொள்கைகளுக்கு உட்பட்டு செயல்படுமாறும் தமது ஊழியர்களை நிறுவனம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.