ஓமானுக்கு ஆட்கடத்தல்: சந்தேகநபரான பெண் சி.ஐ.டியினரால் கைது!

ஓமானுக்கு மனிதக் கடத்தலில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை அவர் கொழும்பு – கோட்டையிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு மனிதக் கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரின் உள்ளூர் முகவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் மாலை கைது செய்யப்பட்டு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதேவேளை, இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளான ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சட்டவிரோதமான முறையில் அனுப்பும் செயற்பாட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் நேற்றுமுன்தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.