பாலத்தினுள் தவறி விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு!

வல்லைப் பாலத்தில் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள போன இளைஞன் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

19 வயதுடைய புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் திலக்ஸன் என இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரும் அவரது நண்பர்கள் சிலரும் இணைந்து வல்லை பாலத்தில் நேற்று மாலை தூண்டில் போட்டு மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது இளைஞன் பாலத்தில் இருந்து நீரேரிக்குள் தவறி விழுந்துள்ளார்.

இந்நிலையில், இளைஞரைத் தேடும் பணியில் பொதுமக்களும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கடற்படையினரின் சுழியோடிகளால் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.