பொலிஸ் – இராணுவம் இணைந்து யாழ்ப்பாணத்தில் சுற்றிவளைப்பு! பலர் கைது

யாழ். நாவாந்துறை, பொம்மைவெளி பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை நடத்தப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கஞ்சா மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.