முல்லைத்தீீவில். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி!

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ”சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்(16) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது.

இந் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் மாவட்டத்தின் பேரூந்து நிலையத்திலிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை மாற்றுத்திறனாளிகளால் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் கல்வி, தொழில் வாய்ப்பு, தொழிற்பயிற்சி, தமக்கான விசேட தேவைப்பாடுகள் முதலான உரிமைகளை வலியுறித்தி குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன் இறுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அடங்கிய தமது கோரிக்கை திட்டமொன்றினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றன.

Leave A Reply

Your email address will not be published.