வைத்தியசாலையின் 8 ஆவது மாடியிலிருந்து குதித்து பெண் நோயாளி உயிர்மாய்ப்பு!

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் நோயாளி ஒருவர் இன்று தற்கொலை செய்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 14ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டடத்தின் 8ஆவது மாடியில் உள்ள ஜன்னலில் இருந்து குதித்தார் என்று கூறப்படும் குறித்த பெண், முதல் தளத்தின் முன்புறமாக உள்ள கொங்கிரீட் தளத்தின் மீது விழுந்துள்ளார்.

நீர்கொழும்பு, அளுத்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.