இங்கிலாந்து பாகிஸ்தான் T20 சமநிலையில் முடிவு.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி – 20 தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது மற்றும் கடைசி  ரி -20 போட்டி நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப்பெற்றது. மொஹமட் ஹாபீஸ் 86 ஓட்டங்களையும், அலி 54 ஓட்டங்களையும் குவித்தனர்.

பின்னர் 191 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. இதன்படி பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 3ஆவது போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றதால் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.