மீட்கப்பட்ட 105 ரோகிங்கியர்களும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு…

இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் காப்பாற்றப்பட்ட 105 ரோகிங்கியர்களும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் காங்கேசன்துறை கடற்படை முகாமில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நேற்றிரவு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது அனைவருக்கும் தோல் ஒவ்வாமை நோய் ஏற்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் குறித்த படகில் 104 பேர் பயணித்தனர் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தபோதும் இவர்கள் பயணித்த படகை எடுத்து வரும் முயற்சியில் கடற்படையினருடன் பணியில்இருந்த ரோகிங்கியர் நேற்று மாலையே கரை திரும்பியதால் அவரது எண்ணிக்கை தவறவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.