வெற்றிலைக்கேணிக் கடலில் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது!

யாழ்ப்பாணம், வெற்றிலைக்கேணிக் கடற்பரப்புக்குள் நுழைந்த தமிழக மீனவர்கள் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதான தமிழக மீனவர்கள் 11 பேரும் கைப்பற்றப்பட்ட படகுடன் மயிலிட்டித் துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.