வடமாகாணத்தில் வரலாற்று சாதனை படைத்த முல்லை மாவட்ட வீரர்கள் கௌரவிப்பு.

2022 ஆம் ஆண்டுக்கான வடமாகாண மென்பந்து துடுப்பாட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (27.12.2022) பி.ப 3.00 மணியளவில் விசுவமடு வள்ளுவர்புரம் பாரதி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வீ.பி பவுண்டேசனின் நிதி அனுசரனையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்) மற்றும் சிறப்பு அதிதியாக மாவட்ட மேதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(காணி) ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் வீரர்களை கௌரவப்படுத்தினார்கள்.

தேசிய மட்ட போட்டியில் பங்குபெறும் வீரர்களுக்கு வீ.பி பவுண்டேசனின் நிதி அனுசரனையில் விளையாட்டுச் சீருடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.முகுந்தன், பாரதி மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு.ஜெகதீஸ்வரன், நியூபாரதி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் இராஜகோபால், வீ.பி பவுண்டேசன் நிறுவனத்தின் இணைப்பாளர், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊர்மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.