யாழ். மக்களுக்குச் சீனாவின் உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!

சீன மக்களால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹுவெய், சீனத்துதரக அரசியல் விவகார அதிகாரி லியோ சொங் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

யாழ். மாவட்டத்தில் 1,320 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக இன்று யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 100 பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபன், யாழ். மாவட்ட மேலதிக அரச (காணி) அதிபர் முரளிதரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் கே.பாலகிருஷ்ணன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.