ADK-வா? மணியா? இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து 13ஆவது நபராக வெளியேறப் போகும் நபர் குறித்த தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாளை வீக் எண்டு எபிசோடு என்பதால் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் மக்களிடையே தொற்றிக் கொண்டுள்ளது.

பிக்பாஸ் தொடங்கி சுமார் 80 நாட்களை கடந்து விட்டது. மீதம் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்றுவரை 112 நபர்கள் பிக்பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 3 வாரங்கள் மீதமுள்ள நிலையில் அடுத்தடுத்து போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு மீதம் இருக்கும் ஐந்து நபர்களை டாப் 5-ல் வைக்க பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் தற்போது 13வது நபராக ஒருவரை வெளியேற்ற பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது.

நமது இணையதளத்தில் எடுத்த அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பிலும் அவரே பின்தங்கி இருக்கிறார். எனவே அவர் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போது வரை மொத்தம் 12 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். ஜி.பி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம், ஜனனி, தனலெட்சுமி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், மணிகண்டன், ஏடிகே, மைனா, கதிரவன், அமுதவாணன் என மொத்தம் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷனில் இருந்து வந்தனர்.

இதில் அசீம் மற்றும் விக்ரமன் முதல் இரண்டு இடங்களை பிடிக்க மணிகண்டன் கடைசி இடத்தை பிடித்திருக்கிறார். எனவே இவர் தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அப்படி விஜய் டிவி முடிவுகளை மாற்ற எண்ணினால் ஏடிகே வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.