சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற லவங்கப்பட்டை தேநீர் !

காலை உணவிற்கு பின்பு இந்த தேநீரை பருகினால், உணவுநன்கு ஜீரணமாகும். சர்க்கரையின் அளவும் குறையும். சோர்வு நீங்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற லவங்கப்பட்டை தேநீர்
(இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்குரியது)

தேவையான பொருட்கள் :

லவங்கப்பட்டை தூள் – 1 தேக்கரண்டி

தண்ணீர் – 500 மி.லி.

செய்முறை :

* தண்ணீரில் லவங்கப்பட்டை தூளை கலந்து சிறு தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அப்போது அதில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் நீரில் இறங்கியிருக்கும்.

* வடிகட்டி, ஒருவர் 200 மி.லி. அளவுக்கு பருகலாம். இது சுவையும், மணமும் கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.

* காலை உணவிற்கு பின்பு இந்த தேநீரை பருகினால், உணவுநன்கு ஜீரணமாகும். சர்க்கரையின் அளவும் குறையும். சோர்வு நீங்கும்.

* சினைப்பை நீர்க்கட்டியால் துன்பப்படும் பெண்கள் தினம் காலை, மாலை இருவேளை இதை பருகவேண்டும். மாதவிடாய் சீராகும்.

* சர்க்கரை நோய் வரும் சூழ்நிலை இருப்பவர்கள் இதை தினமும் அருந்துவது நல்லது.

* உடல்வலி இருக்கும்போது இந்த தேநீரில் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறும் கலந்துகொள்ளலாம்.

* விருப்பப்பட்டவர்கள் இதில் சிறிது கருப்பட்டி அல்லது பனைவெல்லம் அல்லது தேன் கலந்து பருகலாம்.

Leave A Reply

Your email address will not be published.