மன்னார் நானாட்டான் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்.

மன்னார் நானாட்டான் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்தாலோசனை.

நானாட்டான் பிரதேச செயலக பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று (03.09.2020) மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நானாட்டான் பிரதேச செயலாளர் திரு. மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்த குமார் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் நகர திட்டமிடல், வீதிப் போக்குவரத்து, விவசாயம்,கால்நடை, வீட்டுத்திட்டம், சட்டவிரோத மண் அகழ்வு, மின் இணைப்பு,பறவைகள் சரணாலய எல்லயை மாற்றியமைத்தல் , முருங்கன் வைத்தியசாலையிலுள்ள குறைபாடுகள் சம்பந்தமாகவும் மற்றும் நீர்பாசனம் போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான  செல்வம் அடைக்கலநாதன்,சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், திலீபன் மற்றும் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.