கொழும்பு மேயர் வேட்பாளர் தானே என அடம்பிடிக்கும் ரோஸி

“கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நானே மேயர் வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன்.”

– இவ்வாறு கொழும்பு மாநகர சபையின் தற்போதைய மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும், கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் குறித்து கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் போட்டியிடுகின்றார்.

Leave A Reply

Your email address will not be published.