நானுஓயா விபத்தில் 7 பேர் உயிரிழக்க காரணமான பஸ் சாரதி கைது.

நுவரெலியா – நானுஓயா பகுதியில் பஸ் ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் ஏற்பட்ட பாரிய விபத்து தொடர்பில் ,பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (20) இரவு இந்த பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளதுடன், வேனில் பயணித்த மூன்று சிறுவர்கள் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் பஸ் ஓட்டுநர் கவனக்குறைவாக அதிவேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்துள்ளது.அதன்படி நேற்று (21) பிற்பகல் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.