14 இலங்கையர்களுக்கு சிறைத்தண்டனை விதித்த வடக்கு பிரான்ஸ் நீதிமன்றம்.

வடக்கு பிரான்சில் உள்ள 14 இலங்கையர்களுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனித கடத்தல் கும்பலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழுவினருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக RFI தெரிவித்துள்ளது. செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் மனித கடத்தல் தொடர்பாக ஐரோப்பாவில் உள்ள பாதுகாப்புப் படையினரின் உன்னிப்பான அவதானம் காரணமாக, வடக்கு பிரான்சின் பாதுகாப்புப் படையினர் மனித கடத்தல் குறித்த விவரங்களை சமீபத்தில் வெளிப்படுத்த முடிந்தது.

அதன்படி, பாரிஸில் இருந்து வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் கிராமத்தில் கடை நடத்தி வந்த நபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் இலங்கையர்கள் என RFI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

அத்துடன், கிழக்கு ஐரோப்பாவின் எல்லை அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து உக்ரைனில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் குடியேற்றவாசிகளை ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதற்கான விலையை நிர்ணயித்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மற்றொரு சந்தேக நபருக்கு, பியூவாஸ் நீதிமன்றத்தால் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், ஐரோப்பாவிற்குப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் அதனுடன் தொடர்புடைய கடத்தலும் கணிசமாக வளர்ந்துள்ளது.

இந்த சட்டவிரோத குடியேறியவர்களில் பலர் பிரிட்டனுக்கு வர முயற்சி செய்கிறார்கள், மேலும் நாட்டின் புள்ளிவிவரங்களின்படி, 45,000 க்கும் மேற்பட்ட குடியேறியவர்கள் 2022 இல் ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்துள்ளனர், இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 17,000 ஐ விட 60% அதிகரிப்பாகக் காணப்படுகிறது, என RFI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.