ஜூன் மாதமளவில்தான் நிலைமை சரி வரும்! – ரணிலின் சகா பாலித கூறுகின்றார்.

“நாட்டின் நிலைமை மே – ஜூன் மாதமளவில்தான் நிலைமை ஓரளவு சரிவரும் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உண்மையில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அதற்குக் காரணம் கடந்த ஆட்சியில் இடம்பெற்ற பிழையான பொருளாதார முறைமைதான்.

எதிர்வரும் ஏப்ரல் புதுவருடம் மக்களுக்குச் கஷ்டமாகவே இருக்கும். மே – ஜூன் மாதமளவில்தான் நிலைமை ஓரளவு சரிவரும் என்று நம்புகின்றேன்.

இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியைப் பாரமேற்கும்போது இருந்த நிலைமையை விட நல்ல நிலைமை இப்போது உள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.