பெப்ரவரி 7 ஆம் திகதி எம்.பியாகிறார் பௌசி.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நீண்டகாலமாக அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த ஏ.எச்.எம். பௌசி அடுத்த மாதம் 7 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எம்.பியாகின்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி. முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் மேஜர் வேட்பாளராகக் களமிறங்குவதால் எம்.பி. பதிவை இராஜிநாமா செய்துள்ளார். அவரது வெற்றிடத்துக்கே பௌசி நியமிக்கப்படுகின்றார்.

நீண்ட காலமாக சுதந்திரக் கட்சியிலேயே போட்டியிட்டு வந்த பௌசி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்டுத் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.