திருத்தணியில் 3 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் அசைவ ஓட்டல் ஒன்று 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

3-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.

இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 ரூபாய்க்கு பிரியாணியை வாங்கி உணவகத்தில் அமர்ந்து அருந்தியும், பார்சல் வாங்கி கொண்டும் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.