ஒடிசா சுகாதார அமைச்சர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுடப்பட்டு மரணம்

இந்தியாவின் ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ் இன்று (29) பிற்பகல் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுடப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றபோது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை சுட்டதாகவும், தோட்டா அவரது மார்புப் பகுதியில் தாக்கியுள்ளது.

இதில் 2 குண்டுகள் மார்பில் பாய்ந்ததில் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் நிலை குலைந்து கீழே சரிந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமானதையடுத்து, விமானத்தின் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave A Reply

Your email address will not be published.