தெகிவளை புகையிரத விபத்தில் ஊடகவியலாளர் நிபோஜன் உயிரிழந்தார்

தெஹிவளை பகுதியில் இன்று(30) இடம்பெற்ற விபத்தொன்றில் நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர் நிட்சிங்கம் நிபோஜன் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி பிராந்திய செய்தியாளராக கடமையாற்றிய நிட்சிங்கம் நிபோஜன், மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இன்று(30) மாலை 5.30 அளவில் தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு பிள்ளையின் தந்தையான நிபோஜன் கிளிநொச்சி மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்காக மிகவும் அயராது சேவையாற்றியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.