இலங்கையில் நாளை இடியுடன் கூடிய மழை : மக்கள் அவதானம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, திருகோணமலையில் இருந்து 340 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காற்றழுத்த அமைப்பு இலங்கையின் கிழக்கு கரையோரத்தை 7° முதல் 8° வடக்கு அட்சரேகைக்கு இடையில் கடக்க வாய்ப்புள்ளது.

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடன் தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யும். சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும்.

Leave A Reply

Your email address will not be published.