தெமட்டகொடையில் கடத்தப்பட்ட இளைஞர் மரணம்

மாளிகாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனை வேனில் இருந்து கடத்திச் சென்று கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த இளைஞனை விசாரணைக்குட்படுத்த விரும்புவதாகக் கூறி , ஒரு குழுவினர் கடத்தியதாக தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.

பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.