தொழிலதிபரின் கொலையோடு தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது

தளங்கம – பெலவத்தை எனும் பகுதியில் தற்போது கட்டிவரும் அவரது வீட்டில் உள்ள நீச்சல் தடாகத்தில் இறந்து கிடந்த தொழிலதிபரின் கொலையோடு தொடர்புடைய சந்தேகநபர்களை கந்தானை பிரதேசத்தில் வைத்து நேற்று (05) பொலிஸ் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல எடுத்த முயற்சி தோல்வியடைந்தமையால் கைதானார்கள்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் கொத்தட்டுவ எனும் பகுதியைச் சேர்ந்தோர் எனவும் , அவர்கள் 23 மற்றும் 27 வயதிற்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த 30 ஆம் திகதி தொழிலதிபர் காணாமல் போன நிலையில் அவரது சடலம் இரண்டு நாட்களுக்குப் பிறகு பெலவத்தை எம். டி. எச். புற எனும் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

தொழிலதிபரை கொலை செய்த பின்னர் அவருக்கு சொந்தமான மோட்டார் வாகனத்தையும் எடுத்துச் சென்றவர்கள், அதை விட்டுச் சென்ற நிலையில் நீர்கொழும்புக்கு அருகில் வைத்து மூன்றுவது நாள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.