மோதியின் பேச்சில் சூரியாவின் சிங்கம்

ஹைதராபாத்தில் பயிற்சி முடிந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக உரையாடினார்.

அப்பொழுது சூர்யா நடித்த ”சிங்கம்” திரைபடம் பற்றி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

காக்கிச் ச்ட்டை அதிகாரத்தினை எவ்வாறு பயன்படுவது என்றில்லாமல் அதனை அணிந்துக் கொள்வதில் பெருமை கொள்ள வேண்டும்.

காக்கிச் சீருடையினை பெருமையையும்,மரியாதையையும் இழக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

மேலும் அவர் “போலீஸ் அதிகாரிகள் பணியில் சேரும்பொழுது, ஒவ்வொருவரும் நம்மை கண்டு பயப்பட வேண்டும், குறிப்பாக நமது ஏரியா ரவுடிகள் அனைவரும் பயப்பட வேண்டும் என நினைக்கின்றனர். சிங்கம் போன்ற படங்களை பார்த்து விட்டு, தங்களை பற்றி அவர்கள் பெரிய அளவில் நினைத்து கொள்கின்றனர்.

அதனால் உண்மையான பணி புறக்கணிக்கப்படுகிறது. இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும். நமது பணி புறக்கணிக்கப்படவில்லை என்பதனை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்றும் பேசினார்.

சிங்கம் சூர்யா நடித்து மிகவும் வெற்றி பெற்ற படம் ஆகும்.

அதே பெயரில் மூன்று படங்கள் தொடராக வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.