நெல்லியடியில் ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்கள் சிக்கினர்!

யாழ்ப்பாணம், வடமராட்சி, நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில், ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேசங்களைச் சேர்ந்த 24, 27 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 63 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.