யாழ்.அத்தியடியில் 55 வயதுடைய பெண் அடித்துக் கொலை (படங்கள்)

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் 55 வயதுடைய பெண்ணொருவர் நேற்றிரவு (12) அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டில் பணிபுரிந்த நபர், மரக்கட்டை ஒன்றினால் தாக்கி இக்கொலையை செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.