யாழ்.அத்தியடி 55 வயது பெண் கொலை தொடர்பாக மகள் சொன்ன தகவல் (படங்கள்)

யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் சுப்பிரமணியம் கலாநிதி என்ற 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்

குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு ஒரு நபர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாகவும் நேற்று காலையும் அவர் வழமைபோல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் இறந்தவரின் மகள் வீட்டுக்குள் இருந்ததாகவும் இருவரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை எனவும் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும்தெரிவித்திருந்தார்.

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த நபர் கூரிய பிக்கான் ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டார்

குறித்த கொலை தொடர்பில் தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave A Reply

Your email address will not be published.