உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் ரத்தாகவுள்ளது.

இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் ரத்து செய்யப்படவுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்காலத்தில் புதிய நியமனம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி மற்றும் கமிஷன் உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் காரணமாக, உள்ளாட்சி தேர்தல் கண்டிப்பாக தள்ளிப்போகும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி சட்டத்தின் புதிய திருத்தங்களின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 8000 லிருந்து 4000 ஆக குறைக்க வேண்டியதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களும் தானாகவே ரத்து செய்யப்பட்டும்.

வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டாலும், வேட்பாளர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து பாதுகாப்பு வைப்புத் தொகையையும் திரும்ப அளிக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.