இலங்கையின் வடக்கு கிழக்கின் அதிகாரம் மோடியின் கையில்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அதிகாரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளிலேயே இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அவர், இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான அபிவிருத்தி நடவடிக்கைகள் இந்தியாவினால் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அந்த மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் இந்தியப் பிரதமர் மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதே தீர்வு என இந்திய பிரதிநிதிகள் இலங்கைத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டியதாகவும், இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஏதாவது நடக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரே தலைவர் இந்திய பிரதமர் மட்டுமே என்றார்.

Leave A Reply

Your email address will not be published.