மன்னார் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிய கைதி ,மண்டபம் அகதிகள் முகாமில் ….

கடந்த 21ஆம் திகதி, மன்னார் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர், இந்தியா, தமிழ்நாடு மண்டபம் அகதிகள் முகாமில் இருப்பதாக, ​​பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்ள்ளது.

இந்த கைதி வவுனியா சிறைச்சாலையில் இருந்து மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார் .

அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது , ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை , சில நாட்களுக்குப் பிறகு அவர் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாமில் இருக்கும் சில புகைப்படங்களை பாதுகாப்புப் பணியாளர்களால் பார்க்க முடிந்தது .

இந்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மன்னார் பாதுகாப்பு தரப்பினர் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.