மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை! – அரசுக்கு டலஸ் அணி எச்சரிக்கை.

“தேர்தலை நடத்தாவிடின் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவோம்.”

இவ்வாறு டலஸ் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்த வேண்டும். தேர்தலை ஒத்திவைக்கச் சாக்குப்போக்குக் காரணங்களைக் கூறுவதை அரசு நிறுத்த வேண்டும்.

நாட்டின் உண்மை நிலைமை மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ – அவர் தலைமையிலான அரசோ மக்களுக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.