கீழ்த்தர அரசியல் வேண்டாம்! – தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீதி அமைச்சர் எச்சரிக்கை.

“தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் எவரும் அரசியல் நடத்தக்கூடாது என்று நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றோம். தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் தாக்கத்தைச் செலுத்தும்.”

இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“சிறைச்சாலைகளில் இன்னும் 29 தமிழ் அரசியல் கைதிகளே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் ஊடாகவும், ஏனையவர்களைச் சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய நீதிமன்றத்தின் ஊடாகவும் விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களின் கவலைகளை நாங்கள் புரிந்துகொள்கின்றோம். ஆனால், அந்தக் குடும்பங்களின் கண்ணீரில் தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகின்றனர். இது மிகவும் வேதனை தரும் விடயம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.