முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினருக்கு Z+ பாதுகாப்பு

நாட்டின் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது. வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்கள், விளையாட்டு துறை, பொழுதுபோக்குத்துறை, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மிக உயர்ந்த அளவிலான Z+ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கிருஷ்ணா முராரி, அசானுதின் அமனுல்லா ஆகியோர் அமர்வு, முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் உள்துறை அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Z+ பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.