வேதனையில் வெங்காயத்தை ஆடுகளுக்கு உணவாக்கிய விவசாயி..!

இந்தியாவில் சீசனுக்கு ஏற்ப வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை மாறுபடும். இந்த அசாதாரண விலை மாற்றம் என்பது உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கடும் அவதியை தருவதாக நீண்ட கால புகார் கூறப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தி செய்த விவசாய பொருட்களை பெரிய சந்தைகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு உரிய உள்ளீட்டு தொகை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இப்படி தான் தற்போது ஆந்திர மாநிலத்திலும் ஒரு விவசாயி வெங்காய விலை வீழ்ச்சியால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். வெங்காய விலை வீழ்ச்சியால் விரக்தியடைந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தில் ஆடுகளை மேயவிட்டார். கர்னூல் மாவட்டத்தில் உள்ள கய்ரவடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலு, தனது ஐந்து ஏக்கர் விலை நிலத்தில் வெங்காயம் பயிரிட்டு இருந்தார்.

தற்போது ஒரு கிலோ வெங்காயம் ஐந்து ரூபாய்க்கு மட்டும் விலை போவதாக கூறப்படுகிறது. மூன்று லட்ச ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் விலை வீழ்ச்சி காரணமாக சந்தைக்கு கொண்டு செல்வது நஷ்டம் என கருதிய அவர், மன உளைச்சலில் தன்னுடைய நிலத்தில் ஆடுகளை மேயவிட்டு வெங்காயத்தை ஆடுகளுக்கு உணவாக்கினார்.

Leave A Reply

Your email address will not be published.